/* */

நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்  கைது
X

கைது செய்யப்பட்ட ராஜேஷ்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். . இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயங்கொண்டம் தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் 17 வயது மாணவியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் ராஜேசை கண்டித்துள்ளனர்.இருப்பினும் ராஜேஷ் கேட்காமல் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம். செய்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ராஜேஷ் மற்றும் 17 வயது மாணவி இருவரையும் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ் மீது வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 21 Sep 2022 7:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’