/* */

மழையால் இரண்டு வீடுகளில் சுவர் இடிந்து விழுந்து சேதம்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் மழையில் நனைந்த வீட்டின் சுவர் இடிந்து மற்றொரு வீட்டின்மீது விழுந்தது.

HIGHLIGHTS

மழையால் இரண்டு வீடுகளில் சுவர் இடிந்து விழுந்து சேதம்
X

மதனத்தூர் காலனி தெருவில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து மற்றொரு வீட்டின் மீது விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக இரு குடும்பத்தினர் காயமின்றி உயிர்தப்பினர்.


அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி மதனத்தூர் காலனி தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.

தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் திடீரென மழை பெய்தது. மழையின் காரணமாக மாசிலாமணி வீட்டின் ஒரு பக்க செங்கல் சுவர், மழை ஈரத்தில் ஊறி நேற்று இரவு இடிந்து வெளிப்புறமாக சாய்ந்து விழுந்தது.

இதில் அந்த சுவர் அருகில் உள்ள வேல்முருகன் என்பவரின் வீட்டு சுவற்றின் மீது விழுந்ததில், அந்த வீட்டின் சுவரும் இடிந்தது. இருப்பினும் இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் காயமின்றி உயிர்தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாழைக்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி மணிமாறன், சேதமடைந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்தார்.

Updated On: 10 Aug 2021 4:11 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  2. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  3. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  6. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  7. சுற்றுலா
    ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
  8. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  9. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்