/* */

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

வெண்மான்கொண்டான் பெரிய ஓடை பாலத்தடுப்பில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் நீலமேகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு
X

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த அணிக்குறிச்சி மேலத் தெருவைச் சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் நீலமேகம்(31). இவரது மனைவி கீதா(27). இவர்களுக்கு ஹரீஸ்(4) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் (சிங்கப்பூர்) கூலிவேலை பார்த்து வந்த நீலமேகம் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று சித்தப்பா வெங்கடாசலம் என்பவருக்கு கடலை அறைக்க உதவியாக நீலமேகம் வெண்மான்கொண்டான் சென்றுள்ளார். கடலை அறைத்து விட்டு வெங்கடாசலம் சரக்கு ஆட்டோவில் சென்று விட்டார். நீலமேகம் அவரது பைக்கில் அணிக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்த போது, வெண்மான்கொண்டான் பெரிய ஓடை பாலத்தில் உள்ள தடுப்பில் எதிர்பாராத விதமாக பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நீலமேகம் கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 11 April 2022 1:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா