/* */

ஜெயங்கொண்டத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற இருவர் கைது

ஜெயங்கொண்டத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற இருவர் கைது
X

லாட்டரி சீட்டுக்கள் விற்பனை  செய்ததாக கைது  செய்யப்பட்ட இருவர்.

ஜெயங்கொண்டம் பகுதியில் வெளி மாநில மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அரியலூர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் நகரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற 2 நபர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் ஜெயங்கொண்டம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் குருமூர்த்தி (39) கழுவந்தோண்டி கிராமம் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த ராமானுஜம் மகன் செல்வமணி(43) என்பதும், இருவரும் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்திருந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இருவரிடம் இருந்து 394 கேரளா லாட்டரி சீட்டுகளும், லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வகையில் ரூ 2960 /- பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

குருமூர்த்தி, செல்வமணி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 29 May 2022 7:47 AM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  3. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  6. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  7. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  8. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  9. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  10. ஈரோடு
    ஈரோடு லக்காபுரத்தில் சங்கர ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி