/* */

ஜெயங்கொண்டம் அருகே யூகலிப்டஸ் மரத்தோப்பில் தீ

ஜெயங்கொண்டம் அருகே, யூகலிப்டஸ் மரத்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், மரங்கள் எரிந்து சாம்பலாயின.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே யூகலிப்டஸ்  மரத்தோப்பில் தீ
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிராமத்திற்கு உட்பட்ட பெரியவளையம் வனப்பகுதி எதிரே, திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், தனியார் யூகலிப்ட்ஸ் (ஆர்எஸ்பதி) தோப்பு உள்ளது. அங்கு, திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதனை, அவ்வழியே சென்றவர்கள் பார்த்து, தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீ பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர்.

ஆர்எஸ்பதி தோப்பில் காய்ந்த சருகுகள் சில வெட்டப்பட்ட மரங்களின் காய்ந்த கிளைகள், சருகுகள் இருந்ததால் தீ மளமளவென அனைத்து பகுதிக்கும் பரவியது. இதனால் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராட வேண்டியிருந்தது.

மர்ம நபர்கள் வேண்டுமென்றே தீ வைத்தனரா? அல்லது, யாரேனும் சிகரெட் பிடித்து போட்டுவிட்டு போயிருப்பார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 30 April 2021 6:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...