ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: 5 பேர் கைது
![ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: 5 பேர் கைது ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: 5 பேர் கைது](https://www.nativenews.in/h-upload/2022/03/18/1499720-1452559-img20220112161922276.webp)
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஜெயங்கொண்டம் கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை குட்கா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால், அமுதா, துரை, சிவகுமார், சுரேஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூபாய் 5 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதைவஸ்து பொருட்களையும் பறிமுதல் செய்து இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu