/* */

தமிழ் புத்தாண்டு- கங்கைகொண்ட சோழபுரத்தில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டு- கங்கைகொண்ட சோழபுரத்தில் சிறப்பு வழிபாடு
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்றைய தினம் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கோவிலே விழாக்கோலம் பூண்டிருக்கும்.இந்தாண்டு தற்போது கொரோனா வைரஸ் 2-ம் அலை தீவிரமாக வீசி வருவதால், தமிழக அரசின் சார்பில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான இன்று கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்டது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களை வெப்ப அளவு பரிசோதனை செய்து, மாஸ்க் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் கங்கை கொண்டசோழபுரம் கோவிலில் இந்த ஆண்டு கொரோனா விதிமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 14 April 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு