/* */

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண் உள்ளிட்ட 6 பேர் கைது

அரியலூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2பெண் உள்ளிட்ட 6பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண் உள்ளிட்ட 6 பேர் கைது
X

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நான்காம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது தாயாருக்கு வீட்டு வேலை செய்வதில் உதவியாக இருந்து வந்தார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்களுடன் பழக்கமான சாந்தா என்பவர் வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். சிறுமியை அழைத்துச் சென்ற சாந்தா சிறுமியை சந்திரா என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து சந்திரா சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பல்வேறு பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதால் சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து சிறுமியை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர்கள் சேர்த்த நிலையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறியதால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுமியை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய சாந்தா சந்திரா மற்றும் சிறுமியிடம் பாலியலில் ஈடுபட்ட வினோத், பாலாஜி, பிரேம், செந்தில், பாலச்சந்திரன், செந்துறை விடுதி மேனேஜர் தனபால் உரிமையாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட சாந்தா, சந்திரா வினோத், பிரேம், செந்தில், பாலச்சந்திரன், விடுதி மேனேஜர் தனபால் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் பாலாஜி விடுதி உரிமையாளர் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 6 March 2022 1:23 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!