/* */

அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டம் தா. பழூர் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது
X

கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஜெகதீஷ்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் தா.பழூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தா.பழூர் சிவன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ஆய்வு செய்தனர்.

அங்கு சென்று பார்த்தபோது கஞ்சா பொட்டலங்களை வைத்து பிரித்துக் கொண்டிருந்த இருவரை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பியோடிய நிலையில் ஒருவரை பிடித்து அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலத்தை கைப்பற்றினர். இதில் கீழமைகல்பட்டி மெயின்ரோட்டை சேர்ந்த அருமைராஜ் மகன் ஜெகதீஷ் (வயது 20 ) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய கும்பகோணம், அண்ணல் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் விக்னேஷ் என்பவர் தலைமறைவான நிலையில் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

Updated On: 26 Dec 2021 10:41 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  5. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  6. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  7. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  8. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  9. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்