/* */

மணல் குவாரியை திறக்கக்கோரி பேரணி: தா.பழூர் கூட்டத்தில் தீர்மானம்

மணல் குவாரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று, தா.பழூரில் நடந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

மணல் குவாரியை திறக்கக்கோரி பேரணி: தா.பழூர் கூட்டத்தில் தீர்மானம்
X

தா.பழூரில் நடைபெற்ற மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம். 

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நடைபெற்ற மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு, மாவட்ட துணைச் செயலாளர் நீலமேகம் தலைமை வகித்தார். மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க ஆலோசகர் சங்கர், கிளை செயலாளர் செல்வம், மாவட்ட நிர்வாகிகள் அம்பலவாணன், செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் ஜெயபால், தஞ்சை மாவட்ட தலைவர் கோவிந்தராசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் வாழ்த்தி பேசினார்.

கூட்டத்தில், மாநிலம் முழுவதும் மணல் குவாரி திறக்கக்கோரி, மாநிலம் தழுவிய மாட்டுவண்டி தொழிலாளர்கள் சென்னை கோட்டையை நோக்கி, 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேரணியாக செல்வது எனவும், ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட பழைய, புதிய மணல் குவாரிகளை உடனே திறந்துவிட வேண்டும், மணல் குவாரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக காமராஜு வரவேற்றார். முடிவில் செல்வராசு நன்றி கூறினார்.

Updated On: 5 Nov 2021 11:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!