Begin typing your search above and press return to search.
ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பல கிராமங்களில் கனமழை பெய்தது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று மாலை 3 மணி முதலே வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவிய நிலையில் 6 மணிக்கு மேல் ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, தா.பழூர், உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பல கிராமங்களில் கன மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வர தொடங்கி உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.