/* */

தா.பழூர் ஒன்றிய பொதுத்துறை வங்கியாளர் நடப்பு காலாண்டு ஆலோசனை கூட்டம்

அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றிய பொதுத்துறை வங்கியாளர்களின் காலாண்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

தா.பழூர் ஒன்றிய பொதுத்துறை வங்கியாளர் நடப்பு காலாண்டு ஆலோசனை கூட்டம்
X

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் நடப்பு காலாண்டுக்கான ஆலோசனை கூட்டம் தா.பழூர் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

நடப்பு காலாண்டுக்கான கூட்டத்திற்கு முன்னோடி வங்கி மேலாளர் லயனல் பெனடிக்ட் தலைமை தாங்கினார். நபார்டு வங்கி மேலாளர் நவீன்குமார், மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ஜனனி. தா.பழூர் கால்நடை மருத்துவர் வெற்றிவடிவேலன், வேளாண் விற்பனை துறை உதவி அலுவலர் ஜோதி கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தில் பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டம், தாட்கோ கடன் திட்டம் உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களில் கடன் கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் பல்வேறு பயனாளிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது தா.பழூர் வட்டாரத்தில் இலவச கறவை மாடு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருக்கும் 71 விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய வங்கியாளர்களிடம் அவர்களுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக வழங்கப்பட்டன.

விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர் தொடர்புடைய பல்வேறு திட்டங்கள் குறித்தும், விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Nov 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?