/* */

மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானையை சுமந்தபடி நூதன போராட்டம்

சோழமாதேவியில் களிமண் எடுப்பதற்கு அனுமதி தரக்கோரி மண்பாண்ட தொழிலா ளர்கள் மண்பானையை சுமந்து வந்து மனு அளித்தனர்

HIGHLIGHTS

மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானையை சுமந்தபடி நூதன போராட்டம்
X

சோழமாதேவியில் மணல் எடுப்பதற்கு அனுமதி தரக்கோரி 40க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானையை சுமந்தபடி நூதன போராட்டம் நடத்தி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்தனர்.


மண் எடுக்க அனுமதிக்கக்கோரி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வசிக்கும் மண்பாண்டத் தொழிலாளர்கள், மண்பாண்டங்களைச் சுமந்து வந்து கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சோழமாதேவி கிராமத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 5 தலைமுறைக்கும் மேலாக மண்பாண்ட தொழில் செய்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மண்பாண்டத் தொழில் செய்வதற்கு அருகில் உள்ள அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் களிமண் எடுத்து வந்தனர்.தற்போது, அரசு அனுமதி மறுத்துள்ளதால் , களிமணல் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக மண்பாண்டங்கள் தயாரிக்க முடியாமல் தொழிலாளர்கள் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். களிமண் எடுப்பதற்கு அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு முறைப்படி பலமுறை மனு அளித்தும் இதுவரை உரிய அனுமதி கிடைக்கவில்லை.

இதனால். மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. தங்களது நிலை குறித்து அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் விடிவு பிறக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த மண்பாண்டத் தொழிலாளர்கள், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மண்பாண்ட தொழிலாளர்கள், தங்களது வீட்டின் முன்பு மண்பானையை கையில் வைத்துக்கொண்டு அறவழிப் போராட்டம் நடத்தினர். அப்போது, களிமண் அள்ளுவதற்கு அரசு அனுமதி தர வேண்டும், மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று முழக்கமிட்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷிடம், களிமண் அள்ளுவதற்கு அனுமதியளிக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 26 Aug 2021 11:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?