/* */

விரைவில் மாட்டுவண்டி மணல் அள்ள அனுமதி; ஜெயங்கொண்டத்தில் அடையாள அட்டை வழங்கல்

விரைவில் மாட்டுவண்டி மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயங்கொண்டம் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

விரைவில் மாட்டுவண்டி மணல் அள்ள அனுமதி; ஜெயங்கொண்டத்தில் அடையாள அட்டை வழங்கல்
X

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் 500க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தில் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் பேசுகையில், இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் உள்ளதாகவும், அவரது குடும்பங்கள் அனைவரும் அவர்கள் மாட்டு வண்டி தொழிலையே நம்பி உள்ள நிலையில், சென்ற ஆட்சியில் இவர்களது நலனில் அக்கறை காட்டப்படாமல் இருந்து வந்தது.

தற்பொழுது கடந்த இரண்டு மூன்று மாதங்களாக மாட்டுவண்டி தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர், மாட்டுவண்டி மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க கோரி மனு அளித்திருந்தனர். இதனை எடுத்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் மற்றும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஆகிய நானும் சேர்ந்து இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டோம். இப்பகுதியிலுள்ள மாட்டுவண்டி தொழிலாளர்கள் நலன் கருதி, விரைவில் மாட்டுவண்டி மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

மேலும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் 500க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

Updated On: 8 Aug 2021 12:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது