/* */

தனியார் இடத்தை கையகப்படுத்த அரசுக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

தனியார் இடத்தை அரசு கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தனியார் இடத்தை கையகப்படுத்த அரசுக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட ஆதிச்சனூர் கிராம மக்கள்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆதிச்சனூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அக்கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்குவதற்காக வேண்டி, தனியாருக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் இப்பிரச்சனை தொடர்பாக இருதரப்பிலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையில் இன்று பிரச்சனைக்குரிய தனியாருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை அளப்பதற்காக ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஆனந்தன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். அப்போது இடத்தினை அளப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இடத்தின் உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் ஒருதலைப்பட்சமாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்து சாலை திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அரியலூர்- சுத்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலைக்கதிரவன் தலைமையான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், நீதிமன்ற தடை உத்தரவை இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் எங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள், நீதிமன்ற தடை உத்தரவை தருகிறோம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதிகாரிகள் தற்காலிகமாக இடத்தினை அளக்காமல் சென்று விட்டனர்.

பின்னர் இதில் உடன்பாடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 26 Aug 2021 2:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?