Begin typing your search above and press return to search.
ஜெயங்கொண்டம் அருகே வரும் முன்காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
ஜெயங்கொண்டம் அருகே வரும் முன் காப்போம் மருத்துவ சிறப்பு திட்டத்தை எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், மேலணிக்குழி ஊராட்சியில், "வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்" துவக்க விழா , ஊராட்சி மன்ற தலைவர் துரை.முத்துக்குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து,கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன், அட்மா வேளாண் குழு தலைவர் இரா.மணிமாறன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராசாமணிகொடியரசு, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ராமசந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவதாஸ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், மருத்துவத்துறை அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.