/* */

அம்பேத்கர் சிலைக்கு எம்.எல்.ஏ. கண்ணன் மாலை அணிவித்து மரியாதை

ஜெயங்கொண்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

HIGHLIGHTS

அம்பேத்கர் சிலைக்கு எம்.எல்.ஏ. கண்ணன் மாலை அணிவித்து மரியாதை
X

ஜெயங்கொண்டத்தில் கண்ணன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம் நகரில் அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் - சமத்துவ நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் நகர செயலாளரும், நகர்மன்ற துணை தலைவருமான வெ.கொ.கருணாநிதி,மாவட்ட துணை செயலாளர் மு.கணேசன்,வி.சி.க நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் தொகுதி செயலாளர் க.இலக்கியதாசன்,சிவக்குமார் மற்றும் தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள், நகர, வார்டு கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு, குழுமூர் நீட் போராளி அனிதா நினைவிடத்தில்,அனிதா அறக்கட்டளை சார்பாக, அண்ணல் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு மலரஞ்சலியும், அனிதா சிலைக்கு மாலை அணிவித்து,மாணவர்களுக்கு படிப்பிற்கான உபகரணங்களும்,கல்வி உதவித் தொகையும், வழங்கும் நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், செந்துறை ஒன்றிய செயலாளர் மு. ஞானமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அனிதாவின் சகோதரர் மணிரத்தினம்,மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் விஸ்வநாதன்,ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் எழில்மாறன்,ஒன்றிய குழு உறுப்பினர் ரெங்கராதன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 14 April 2022 9:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது