/* */

புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

தா.பழூர் ஒன்றியத்தில் புதிய பள்ளி கட்டிடங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

புதிய பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
X

சிந்தாமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திறந்து வைத்தார்.




அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் சிந்தாமணி ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 15.47 லட்சம் மதிப்பீட்டில் 30 மாணவர்கள் அமரக்கூடிய புதிய கட்டிடமும், காரைக்குறிச்சி ஊராட்சி அருள்மொழி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் 10 லட்சம் மதிப்பீட்டில் 54 மாணவர்கள் அமரக்கூடிய அங்கன்வாடி கட்டிடங்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்த், திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், குணசேகரன், சிந்தாமணி கிராம நிர்வாக அலுவலர் மாலதி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா, ஒன்றிய குழு உறுப்பினர் முருகானந்தம், அருள்மொழி கிராமத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா விஜயகுமார், மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 28 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...