Begin typing your search above and press return to search.
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலி
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி நாட்டியாஞ்சலியை பக்தர்களும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்
HIGHLIGHTS
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. திருவனந்தபும், பெங்களூர், மைசூர், சென்னை, கோயம்புத்தூர், உள்ளிட்ட பலப்பகுதிகளில் இருந்தும் பல நாட்டியப்பள்ளி கலைஞர்களும், தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவிகள் பரதநாட்டியம் நடைபெற்றது.காலபைரவாஷ்டகம், தாயே யசோதா, சிவன்சக்தி, ஆசைமுகம் என்று 15ற்கும் மேற்பட்ட நாட்டியங்களை ஆடி மாணவர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.நாட்டியாஞ்சலியை நூற்றுகணக்கான பக்தர்களும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.