/* */

அரியலூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து பாமக வினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் மது கடைகள் திறந்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து பாமக வினர் ஆர்ப்பாட்டம்
X

அரியலூரில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் அவரது இல்லத்தின் முன்பு  நடந்த ஆர்ப்பாட்டம்.

கொரனா காலத்தில் மதுக்கடைகள் திறந்ததை கண்டித்தும், மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர், அவரது இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் அவரது இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில சமூக நீதிப் பேரவை மாநில தலைவர் வழக்கறிஞர் பாலு தலைமையில் மீன்சுருட்டி அருகே வாழைக்குட்டை இல்லத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூரில் மாநிலத் துணைத் தலைவர் சின்னதுரை இல்லத்தின் முன்பு பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைப் போன்றே மாவட்டத்தில் செந்துறை, திருமானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியினர் அவர்களின் இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On: 17 Jun 2021 8:41 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  6. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  7. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  8. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  9. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  10. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!