வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன்
ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளுக்கும் சென்று, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, பொதுமக்களிடத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர், நகர்மன்ற துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி தலைமையில், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளுக்கும் சென்று, வாக்களித்து வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, பொதுமக்களிடத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
உடன் தி.மு.கழக சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர் மு.கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஆ.சங்கர்,ம.தி.மு.க மாவட்ட பொருளாளர் புகழேந்தி, ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர் சுமதி சிவக்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள், தோழமை கட்சியின் நிர்வாகிகள், நகர, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தினர் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu