/* */

இந்திய ஜனநாய கட்சி சார்பில் தா.பழூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

Protests Today - மின்சாரம், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி இந்திய ஜனநாய கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

இந்திய ஜனநாய கட்சி சார்பில் தா.பழூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக கட்சியினர்.

Protests Today - அரியலூர் கிழக்கு மாவட்ட இந்திய ஜனநாய கட்சி சார்பில் தா.பழூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் செல்வநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜோசப் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட அமைப்பு செயலாளர் கார்மல்ராஜ் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்சார விலை உயர்வை குறைக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், குறிச்சி கிராமத்தில் அபாய நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும். கீழமைக்கல்பட்டி - நாயகனை பிரியாள் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.

சிதம்பரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை பணி முடிவடையாமல் வாகன வரி வசூலிப்பது. மாவட்ட தலைமை மருத்துவமனை அறிவித்த ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் அதிகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 Aug 2022 10:20 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்