/* */

மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து மூதாட்டி உயிரிழப்பு

மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து சின்னம்மாள் (80) என்கிற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

HIGHLIGHTS

மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து மூதாட்டி உயிரிழப்பு
X

மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து சேதமடைந்தது 

அரியலூர் -மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து மூதாட்டி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலி.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் கிராமம் காத்தாயி அம்மன் கோவில் சாலையில் உள்ளது சின்னம்மாள் என்பவரது கூரைவீடு. இவருக்கு 3 மகள் உள்ளனர். அனைவரும் திருமணம் செய்து கொண்டு சென்ற நிலையில் இவர் தனிமையில் இருந்து வருகிறார். இந்நிலையில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக ஒரு சிறிய கூரை வீட்டில் வசித்து வருகிறார். மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து சின்னம்மாள் (80) என்கிற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்பகுதியில் உள்ள பொது மக்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் வீடு முற்றிலும் எரிந்தது. இதுகுறித்து தா.பழூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் உடல் கருகி உயிரிழந்த மூதாட்டியின் உடல் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 28 May 2022 3:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!