சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் டூவீலர் மெக்கானிக் கைது

சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் டூவீலர் மெக்கானிக் கைது
X

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோசட்டத்தில் கைதான  விக்னேஸ்வரன்


15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து 5 மாத கர்ப்பிணி ஆக்கிய டூவீலர் மெக்கானிக் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

ஜெயங்கொண்டம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து 5 மாத கர்ப்பிணி ஆக்கிய டூவீலர் மெக்கானிக் போக்ஸோ சட்டத்தில் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் கோட்டைவாசல் மேல வீதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (26). இவர் டூவிலர்மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவர் வடகடல் பகுதியைச் சேர்ந்த தத்தனூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதில் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி சிறுமியை கர்ப்பமாக்கிய விக்னேஸ்வரன் மீது வழக்கு பதிந்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags

Next Story
ai solutions for small business