/* */

ஆண்டிமடம் அருகே கஞ்சா வைத்திருந்தவர்களை கைது செய்த போலீஸ்

ஆண்டிமடம் அருகே கஞ்சா வைத்திருந்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஆண்டிமடம் அருகே கஞ்சா வைத்திருந்தவர்களை கைது செய்த போலீஸ்
X

கைதான நான்கு பேரில் இருவர். 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரதராஜன்பேட்டை பேருந்து நிலையத்தில் கஞ்சா இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆண்டிமடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிச்சைமணி தலைமையிலான காவலர்கள் அங்கு சென்று சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த நான்கு நபர்களை பிடிக்க முயன்றனர். நான்கு பேரும் போலீஸை பார்த்தவுடன் கையில் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை மறைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற போது அவர்களை வளைத்து பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் கண்டியங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெனிட்டோ, ஜெயங்கொண்டம் இலையூர் பகுதியைச் சேர்ந்த வினோத், வரதராஜன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம், கடலூர் மாவட்டம் பழைய அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்த அருண் பிரேம்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்த சுமார் 24 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 11 April 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  2. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  3. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  5. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  6. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  7. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...
  8. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  9. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...