/* */

3 வேளாண் சட்டங்கள் ரத்து கோரி ஜெயங்கொண்டத்தில் ஏர் உழவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஜெயங்கொண்டத்தில் உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

3 வேளாண் சட்டங்கள் ரத்து கோரி ஜெயங்கொண்டத்தில் ஏர் உழவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

ஜெயங்கொண்டத்தில்  மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஏர் உழவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு ஏர்உழவர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏர்உழவர் சங்க நிறுவனர் மற்றும் தலைவர் சுபா.இளவரசன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இதில் மத்திய அரசை கண்டித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

உழவர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இயற்கை வேளாண்மையை காப்பாற்றிட இயற்கை வேளாண்மை பொருட்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் ,கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் போல், மாபெரும் ஆர்பாட்த்தை ஏர்உழவர் சங்கம் சார்பில் நடத்துவோம் என ஏர்உழவர் சங்க நிறுவனர் மற்றும் தலைவர் சுபா.இளவரசன் கூறினார் .

Updated On: 17 Sep 2021 9:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  2. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  5. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  6. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  7. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  8. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  9. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  10. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!