/* */

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து விவசாயி மகள் சாதனை

எனது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளேன். நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் ஆவதே எனது விருப்பம் : சாதனை மாணவி சிவானி

HIGHLIGHTS

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து விவசாயி மகள் சாதனை
X

மாணவி சிவானி. 

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த அரியலூர் விவசாயி மகள் சாதனை.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலணிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் இவரது மகள் ஷிவானி என்பவர் 600-க்கு, 595 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இதில் தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 97 மதிப்பெண்களும், கணிதம் இயற்பியல், வேதியல் உயிரியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

பின்னர் இதுபற்றி சாதனை மாணவி சிவானி தெரிவிக்கையில், சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து எனது பெற்றோர்கள் மிகவும் கடினப்பட்டு என்னை படிக்க வைத்துள்ளனர். எனது பெற்றோரின் நம்பிக்கையை வீணடிக்காமல் நல்ல முறையில் மதிப்பெண்கள் எடுத்து பள்ளிக்கும், எனது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளேன். நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் ஆவதே எனது விருப்பம் என்றார்.

Updated On: 20 Jun 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!