/* */

புல்வாமா தாக்குதல் உயிரிழந்த ராணுவ வீரருக்கு குடும்பத்தினர் அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு அவரது சொந்த கிராமத்தில் குடும்பத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

புல்வாமா தாக்குதல் உயிரிழந்த ராணுவ வீரருக்கு குடும்பத்தினர் அஞ்சலி
X

அரியலூர்-புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு அவரது சொந்த கிராமத்தில் குடும்பத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


.கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா இப்பகுதியில் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சி.ஆர்.பி.எஃப் படையினர் சென்ற வாகனத்தின் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 40 மத்திய பாதுகாப்பு படை ராணுவத்தினர் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவத்தில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவச்சந்திரன் வீரமரணம் அடைந்தார்.

அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் அவரது மனைவி குழந்தைகள், தாய் மற்றும் அவரது உறவினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

புல்வாமா தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு நபர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 Feb 2022 4:35 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...