/* */

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் பலி

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் பலி
X

மின் விபத்து நடந்த பகுதி. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடுகபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் தண்டபாணி. இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு, மேல் மாடியில் உள்ள தனது அறைக்கு அவர் சென்றுள்ளார்.

அப்போது உணவருந்திவிட்டு கைகளைக் கழுவுவதற்காக தண்ணீரை ஊற்றிய போது எதிர்பாராதவிதமாக கீழே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் தண்ணீர் பட்டு அதிலிருந்து தண்டபாணி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 7 Feb 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  3. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  10. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்