/* */

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி சினை பசுமாடு உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற சினை பசுமாடு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி சினை  பசுமாடு உயிரிழப்பு
X

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கியதில் சினை பசுமாடு இறந்தது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சூரியமனல் கிராமத்தைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் ஜெயங்கொண்டம் அருகே 2 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த சினை பசுமாடு ஒன்று இன்று காலை திருச்சி-சிதம்பரம் சாலையில் மேய்ச்சலுக்கு சென்றது.

அப்போது சாலையோரத்தில் இருந்த தெரு விளக்கு மின் கம்பம் அருகிலிருந்த செடி, கொடிகளை பசுமாடு தின்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பத்தின் கீழ்ப் புறத்தில் இருந்த எர்த் மின் வயரில் பசு மாட்டின் உடல் பட்டது.

இதில் மின்சாரம் தாக்கி பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர் இதுகுறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக தெரு விளக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இறந்த பசு மாட்டின் மதிப்பு சுமார் 25 ஆயிரம் இருக்கும் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 1 Dec 2021 7:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  7. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  8. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  9. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  10. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்