/* */

அரியலூரில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள்: மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் தற்செயல் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு.

HIGHLIGHTS

அரியலூரில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள்: மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
X

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் தற்செயல் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் சென்று ஆய்வு.


அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் காலியாக உள்ள மணகெதி, நாயகணைப்பிரியாள் ஊராட்சி மன்றத்தலைவர் பதவியிடங்கள் மற்றும் அம்பாபூர் ஊராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தற்செயல் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட தா.பழூர் ஒன்றியத்தில் மணகெதி, நாயகணைப்பிரியாள் ஊராட்சி மன்றத்தலைவர்கள், அம்பாபூர் 8-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகள் தற்போது காலியாக உள்ளது. மேற்காணும் பதவியிடங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள இத்தேர்தலுக்காக மணகெதி ஊராட்சியில் 3 வாக்குச்சாவடி மையங்களும், நாயகனைப்பிரியாள் ஊராட்சியில் 5 வாக்குச்சாவடி மையங்களும், அம்பாபூர் ஊராட்சியில் 1 வாக்கச்சாவடி மையங்களும் என 9 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதன்படி, மணகெதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நாயகனைப்பிரியாள் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புனித மிக்கேல் உயர்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையக்கட்டங்களில் குடிநீர், கழிவறை, மின்சாரம் மற்றும் சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நடைபெறவுள்ள தற்செயல் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் வசதிகளுக்காக மேற்காணும் வசதிகள் அனைத்தும் நிறைவேற்றிட தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 6 Aug 2021 11:34 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள்:...
  4. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  6. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  7. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  9. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...