/* */

கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

ஜெயங்கொண்டம் கொரோனா சிறப்பு சிகிச்சை மய்யத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
X

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 சிறப்பு சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும், ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா,நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,

ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் வசதிகளுக்காக போர்கால அடிப்படையில் படுக்கை மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், கொரோனா நோய் தொற்றை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் தடுப்பூசிகளை தகுதியான அனைவருக்கும் செலுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் தமிழக அரசு மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அதன்படி, பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியினை பின்பற்றுதல் மற்றும் அடிக்கடி சோப்புபோட்டு கைக்கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தெரிவித்தார்.

இந்ந ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், வட்டாட்சியர் ஆனந்த் (ஜெயங்கொண்டம்), முத்துகிருஷ்ணன் (ஆண்டிமடம்), நகராட்சி ஆணையர் சுபாஷினி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் உஷா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 19 May 2021 5:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!