Begin typing your search above and press return to search.
விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு, விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு, விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் எ.சங்கர் தலைமை வகித்தார். நகர தலைவர் ஆர்.மணிகண்டன் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார். கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.