/* */

ஜெயங்கொண்டத்தில் மூதாட்டியின் செயினை பறித்த வாலிபர் கைது

ஜெயங்கொண்டத்தில், மூதாட்டியின் செயினை பறித்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில் மூதாட்டியின் செயினை பறித்த வாலிபர் கைது
X
முருகன் 

ஜெயங்கொண்டம் அருகே உள்ள காக்காபாளையம் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் மனைவி மருதாயி. (80) இவர் நேற்று முன்தினம் மாலை காக்காபாளையத்திலிருந்து காசாங்கோட்டை செல்லும் சாலையில், அருகில் உள்ள அவரது நிலத்தில் கடலைக்கு களை எடுத்து கொண்டிருந்துள்ளார். அவ்வழியே வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், மருதாயி அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்து ஓட முயன்றார். அவரது கையை பிடித்துக்கொண்டே மருதாயி அலறியபடி உதவிக்கு குரல் எழுப்பினார். எனினும் அவரை தள்ளிவிட்டு, வாலிபர் தப்பினார்.

இது குறித்து, உடையார்பாளையம் காவல்நிலையத்தில் மருதாயி மகன் கருணாநிதி புகார் அளித்தார். விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட்டது, வி கைகாட்டி அருகே நாகமங்கலம் அடுத்த காஞ்சிலிக் கோட்டை தெருவை சேர்ந்த தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்க்கும் ஜெயராமன் மகன் முருகன் (29)என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 25 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  2. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  3. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  4. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  5. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  6. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  7. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  8. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்