/* */

மணல் குவாரி திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

மணல் குவாரி திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஜெயங்கொண்டத்தில் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்ககோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் 22 இடங்களில் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்த நிலையில், தற்போது 4 இடங்களில் மட்டுமே மாட்டு வண்டி மணல் குவாரி திறக்கப்பட்டுள்ளது. இது அரியலூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தில் அறிவித்தபடி தமிழக அரசு அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், செந்துறை, திருமானூர் ஒன்றியங்களில் உடனடியாக மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீர்வள துறை அதிகாரிகள் உடனடியாக இடங்களை ஆய்வு செய்து மணல் அள்ள இடம் தேர்வு செய்து மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி பூங்காவில் இருந்து கோஷம் எழுப்பியவாறு ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

தமிழக அரசு உடனடியாக மாட்டு வண்டி மணல் குவாரியை உடனடியாக தமிழகத்தில் திறக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களை ஒன்று திரட்டி நீர்வளத்துறை அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால் தெரிவித்தார்.

Updated On: 18 May 2022 9:58 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  2. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  3. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  4. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  6. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...
  7. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  8. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...
  9. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு