/* */

ஜெயங்கொண்டம்: கஞ்சா விற்பனை செய்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது

ஜெயங்கொண்டம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம்: கஞ்சா விற்பனை செய்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது
X

கஞ்சா விற்பனை செய்த செந்தில்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பயிற்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கீழக்குடியிருப்பு விருத்தாசலம் ரோட்டிற்கு அருகே தனியார் திருமண மண்டபத்திற்கு பின்புறம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது அங்கு 3 இளைஞர்கள் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஜெயங்கொண்டம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செந்தில், கீழத்தெருவை 19 வயது சிறுவன் மற்றும் உடையார்பாளையம் கைகளநாட்டார் தெருவைச் சேர்ந்த சின்னவளையம் தெற்குத் தெருவை சேர்ந்த 19 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூபாய் 18 ஆயிரத்து 180 மதிப்புள்ள ஒரு கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நடுவர் மன்ற நீதிபதி சுப்பிரமணியன் 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மூன்று பேரும் ஜெயங்கொண்டம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 5 Dec 2021 6:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது