/* */

மன உளைச்சல் காரணமாக மாட்டு வண்டி தொழிலாளி தற்கொலை முயற்சி

ஜெயங்கொண்டம் அருகே மன உளைச்சலால் மாட்டு வண்டி தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

மன உளைச்சல் காரணமாக மாட்டு வண்டி தொழிலாளி தற்கொலை முயற்சி
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாஸ்கர் மணல் மாட்டு வண்டி ஓட்டி, அன்றாடம் வருமானம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மாட்டு வண்டி மணல் குவாரிகள் மூடப்பட்டதால், தொழில் இல்லாமல் பாஸ்கர் மிகவும் வறுமையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அனுமதி இல்லாமல் மாட்டு வண்டியில் மணல் எடுத்து வந்ததாக கூறி, காவல்துறையினர் வண்டியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், நீதிமன்ற உத்தரவுப்படி 5,000 அபராதம் கட்டினால் மாட்டு வண்டியை மீட்டு செல்லலாம் என போலீஸார் கூறியுள்ளனர்.

ஏற்கனவே சரியான வேலையில்லாமல் வருமானம் இன்றி ஏழ்மை நிலையில் இருக்கும் போது, காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டியை மீட்க முடியாதது குறித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் புலம்பிக் கொண்டு, சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மன உளைச்சலுக்கு ஆளான பாஸ்கர், உதயநத்தம் பேருந்து நிறுத்தத்தில் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த பொதுமக்கள், உடனடியாக தண்ணீரை அவர் மீது ஊற்றி தீயை அணைத்தனர்.

ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பாஸ்கர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு என தனி மணல் குவாரி அமைக்க வேண்டும் என தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


Updated On: 2 Sep 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?