/* */

அரியலூரில் முழுஊரடங்கில் சமூக இடைவெளி இல்லாமல் பொருட்களை வாங்கும் மக்கள்

அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கில் கொரோனா விபரீதம் அறியாமல் கூட்டமாக கூடி பொருட்களை பொதுமக்கள் வாங்குகின்றனர் என சமூக ஆர்வலர்கள் கவலையடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

அரியலூரில் முழுஊரடங்கில் சமூக இடைவெளி இல்லாமல் பொருட்களை வாங்கும் மக்கள்
X

கொரோனா விபரீதம் அறிமாத பொதுமக்கள் அரியலூரில் கூட்டமாக கூடி பொருட்களை வாங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளதை சாதமாகமாக்கி கொண்ட பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்தால் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை.

இதனையடுத்து தமிழகஅரசு திங்கள்கிழமை முதல் தளர்வுகள் அற்ற முழுஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதற்காக இன்றும் நாளையும் கடைகளை திறக்க உத்திரவிட்டுள்ளது.

இதனால் ஜெயங்கொண்டம் நகரில் இன்று தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க கடைவீதி, காய்கறி மார்க்கெட், விருத்தாச்சலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொருட்களை வாங்க சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் அதிகஅளவில் கூடினர்.

அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பொது மக்களிடையே சமூக இடைவெளி என்பது இல்லை. ஏற்கனவே கொரோனா தொற்றின் தாக்கம் தினந்தோறும் அதிகம் உள்ள ஜெயங்கொண்டம் நகர் மற்றும் ஊரகப்பகுதியில் மேலும் வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளையும் கடைகள் 9மணிவரை திறந்திருக்கும் என்ற நிலையில் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி நடமாடுவது கொரோனா தொற்றை விலைக்கு வாங்கி வீட்டிற்கு கொண்டு செல்வது போன்றதாகிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தியவசிய தேவைகளுக்காக அரசு கடைகளை திறக்க உத்திரவிட்டால் இதனை பொதுமக்கள் தங்களுக்கு சாதமாக்கி கொண்டு தினந்தோறும் வீட்டிற்கு பொருள்களை வாங்கிச் செல்வதை கைவிட்டு மளிகை பொருள்களை மாதத்திற்கு ஒருமுறையும், காய்கறிகளை வாரத்திற்கு ஒருமுறை வாங்கும் பழக்கத்திற்கு கொரோனா தொற்றுமுடியும்வரை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுவிக்கின்றனர்.

Updated On: 22 May 2021 2:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?