/* */

தத்தனூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட்-19 சிகிச்சை மையம் கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் தத்தனூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மய்யத்தை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தத்தனூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட்-19  சிகிச்சை மையம் கலெக்டர் ஆய்வு
X

அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்லூரி வளாகத்தில் கோவிட்-19 சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவிட் தொற்றாளர்களுக்கு இம்மையத்தில் ஏற்படுத்துப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். jஇந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,

ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஜெயங்கொண்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல் அருகே பிற்படுத்தப்பட்டோர் மாணவர், மாணவியர் விடுதி மற்றும் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி ஆகியவற்றில் 91 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் இச்சூழ்நிலையில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது அவசியமாகிறது. அதன் அடிப்படையில், தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட்-19 சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்திற்கு தேவையான படுக்கை வசதிகள், கழிவறை வசதிகள், மின் வசதிகள் உள்ளிட்டவைகள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது.

இம்மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களுக்கு யோகா பயிற்சி, மூச்சுப்பயிற்சி, கபசூர குடிநீர், சிற்றுண்டி, உடல் தேற்றி மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவைகள் சித்த மருத்துவர்கள் மற்றும் அலோபதி மருத்துவர்கள் மூலமாக சிகிச்சைகளுடன் கொரோனா நோய் தொற்று தொடர்பான விழிப்புணர்வுகளும் அளிக்கப்படவுள்ளன.

மேலும், கொரோனா வைரஸ் நோய் தொற்றினை குணப்படுத்துவதில் ஆரோக்கியமான உணவு மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளதால், மருத்துவர்களின் வழிக்காட்டுதலின்படி ஆரோக்கியமான சரிவிகித உணவு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தெரிவித்தார்.

இந்ந ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், வட்டாட்சியர் ஆனந்த் (ஜெயங்கொண்டம்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 26 May 2021 1:04 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி