வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்ட அரியலூர் எம்எல்ஏ

கொள்ளிட ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா பார்வையிட்டார்.
அரியலூர் மாவட்டம் தா பலூர் ஒன்றியம் ஸ்ரீ புரந்தான் ஊராட்சி அணைக்குடி, அரங்கோட்டை, கோவிந்தபுத்துர், முட்டுவாஞ்சேரி மற்றும் மேலராமநல்லூர் ஆகிய கிராமத்தில் கொள்ளிட ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா பார்வையிட்டார்.
நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் சௌந்தர்ராஜன், மதிமுக ஒன்றிய செயலாளர் கவிஞர் எழிலரசன், அரியலூர் தெற்கு ஒன்றிய செயலளார் க.இராமநாதன், அரியலூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் பி சங்கர், குருவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரவி மற்றும் அதிகாரிகள் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu