/* */

ஜெயங்கொண்டம் அரசு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா

ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அரசு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசினை வழங்குகிறார் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வர் ரா.கலைச்செல்வி தலைமை வகித்தார். எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்வி மற்றும் விளையாட்டு குறித்து மாணவர்களிடம் பேசினார். தொடர்ந்து, முன்னதாக கல்லூரியில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

விழாவில் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார், நகர்மன்ற துணைத்தலைவர் வெ.கொ.கருணாநிதி மற்றும் கல்லூரி அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் ம.ராசமூர்த்தி வரவேற்றார். நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் முனைவர் அன்பரசன் நன்றி கூறினார்.

Updated On: 30 April 2022 11:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...