/* */

கார் மோதி தொழிலாளி இறப்பையொட்டி உடையார்பாளையத்தில் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தில் விபத்தில் தொழிலாளி இறந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கார் மோதி  தொழிலாளி இறப்பையொட்டி  உடையார்பாளையத்தில் சாலை மறியல்
X

சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஏந்தல் மெயின்ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தினக் கூலி தொழிலாளி முத்து. அவரது மனைவி சரோஜா. இருவரும் இருசக்கர வாகனத்தில் உடையார் பாளையத்தில் உள்ள தனது மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதை பார்ப்பதற்கு சென்றுள்ளனர். பார்த்து விட்டு அங்கிருந்து ஏந்தல் செல்வதற்காக திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது, அவ்வழியே வந்த கார் மோதியதில், முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சரோஜா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்திற்கு மதுபான கடையும், மேம்பாலம் அமைக்காமல் நான்கு ரோடும் சந்திக்கும் சாலையாக இருப்பதும் காரணம் எனக்கூறி பொதுமக்கள் சாலை மறியலில் 1 மணிநேரத்திற்கு மேலாக ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் உடையார் பாளையம் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் அளித்த உறுதிமொழியின்பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Updated On: 21 Oct 2021 9:57 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  3. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  5. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  8. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  9. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  10. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?