/* */

ஜெயங்கொண்டம் அருகே போக்சோவில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோவில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே போக்சோவில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான வினோத்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி , மேலும் சிறுமியின் தாய் உதவியுடன் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலில் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் (27) என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார். சிறுமி குழந்தைகள் உதவி எண்: 1098 என்ற எண்ணிற்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் சிறுமியை மீட்டனர்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு காவல்துறையினர் வினோத்தை 20.10.2021 அன்று போக்சோவில் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்ததையடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வினோத்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து இதற்கான ஆவணங்களை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வினோத்குமாரிடம் போலீசார் வழங்கினர்.

Updated On: 8 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை