/* */

அரியலூர் மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்

அரியலூர் மாவட்டம் கோடாலிகருப்பூர் கிராமத்தில் 500ஏக்கர் நிலத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர் மழைநீரில் மூழ்கியது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்
X

கோடாலிகருப்பூர் கிராமத்தில் மழை நீரில்  500 ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது.


அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் அவ்வப்போது மழை கொட்டித் தீர்த்தது. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் அதிகப்படியாக தேங்கியது பல்வேறு இடங்களில் தண்ணீர் வடிய வடிகால் வசதி இல்லாமல் தேங்கிக் கிடந்தது.

கோடாலிகருப்பூர் மற்றும் அகரபெட்டை கிராமத்திற்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் நெல் நடவு விவசாய நிலங்களில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் நடவு செய்யப்பட்ட நான்கு நாட்களே ஆன நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் நெல் நடவு நாற்றுகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மழைநீரில் மூழ்கிய நெற்பயிரை விவசாயிகள் வெளியே எடுத்து காட்டினர்.

ஆகையால் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் வாய்க்கால் அமைத்து, வரும் மழைக்காலங்களிலும், வரும் ஆண்டுகளிலும் மழையில் சிக்கி பயிர்கள் வீணாக வண்ணம் பாதுகாக்க வேண்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 Oct 2021 9:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  3. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  4. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  5. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  6. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  7. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  10. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...