/* */

ஜெயங்கொண்டம் அருகே பெண் குழந்தை விற்பனை: தாய்-தந்தை உள்பட 5 பேர் கைது

ஜெயங்கொண்டம்அருகே பெண் குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு விற்ற தாய்- தந்தை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே பெண் குழந்தை விற்பனை: தாய்-தந்தை உள்பட 5 பேர் கைது
X

பெற்ற குழந்தையை விற்ற சரவணன் -மீனா தம்பதியினர்


ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவுி மீனா. இந்த தம்பதியினருக்கு சஞ்சனா, சாதனா, பிரியதர்ஷினி, சுபஸ்ரீ உள்ளிட்ட நான்கு மகள்கள் உள்ளனர்.

சுபஸ்ரீ பிறந்து மூன்று மாதங்களே ஆன நிலையில், சுபஸ்ரீ யின் தந்தை சரவணன், அந்த குழந்தையை ஈரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், செந்தில்குமார், மண்ணச்சநல்லூரை சேர்ந்த முத்தையன் ஆகியோர் மூலம், கோயமுத்தூரில் உள்ள ஒரு தம்பதியினருக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர், வடவீக்கம் கிராமத்தில் குழந்தையை விற்ற தம்பதிகள் குறித்து விசாரணையை துவக்கினர். விசாரணையில் இவர்களது வீட்டிற்கு கடந்த சில தினங்களாக மர்ம நபர்கள் வந்து சென்றது தெரியவந்தது.


இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் சரவணன்- மீனா தம்பதியினரிடம் விசாரித்தபோது, நான்காவது குழந்தையை விற்பனை செய்ததாக ஒப்புக் கொண்டனர். கோயமுத்தூரில் இருந்து 3 மாத பெண் குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர். ஜெயங்கொண்டம் காவல்துறையினர் சரவணன் -மீனா தம்பதியினர் உட்பட 5 பேரை கைது செய்தனர். இச்சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 22 Sep 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  2. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  5. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  7. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  8. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  9. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...