அரியலூர்: 3 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலையால் சோகம்

தற்கொலை செய்து கொண்ட சகுந்தலா.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்புமணி. இவரது மனைவி சகுந்தலா (வயது 26) திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது. மேலும் தற்போது சகுந்தலா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக குடும்பத்தில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சகுந்தலா மர்மமான முறையில் தூக்கில் தெங்கியுள்ளார். அதைக் கேள்விப்பட்ட சகுந்தலாவின் உறவினர்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் சகுந்தலாவின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த பெண் இறந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu