/* */

பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போக்குவரத்து பள்ளி

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு போக்குவரத்து பள்ளி மூலம் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட காவல்துறையால் கயர்லாபாத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி உருவாக்கப்பட்டு உள்ளது.

இங்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழிகாட்டுதலின்படிபோக்குவரத்து காவல் ஆய்வாளர் புண்ணியமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டியன் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு, தினசரி சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.


பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை இயக்கும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும்,நான்கு சக்கர வாகனங்களை இயக்கும்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.


கனரக வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு விதிகள், போக்குவரத்து சமிக்ஞைகளை மதித்து வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. இது தவிர பொதுமக்களுக்கு சாலை போக்குவரத்து சமிக்ஞை பதாகைகள் மற்றும் மாதிரி சாலைகள் ஆகியவற்றைக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Updated On: 8 Oct 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புதிய விடியல்! வாழ்த்துவோம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  3. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  5. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  6. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  8. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  9. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு