/* */

தாமதமாக வந்த பெண்களிடம் காரை நிறுத்தி மனு வாங்கிய மாவட்ட கலெக்டர்

பெண்கள் இருப்பதை பார்த்து மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி காரை நிறுத்தி அவர்களை மதித்து மனுவாங்கியது அனைவரது பாராட்டையும் பெற்றது.

HIGHLIGHTS

தாமதமாக வந்த பெண்களிடம் காரை நிறுத்தி மனு வாங்கிய மாவட்ட கலெக்டர்
X

 அலுவலகத்திற்கு வெளியே காரை நிறுத்தி பெண்களிடம் மனு வாங்கிய மாவட்ட கலெக்டர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெறுவது வழக்கம். இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், கீழராயபுரம் கிராமத்தை சேர்ந்த காலனி தெருவில் வசிக்கும் 50 பெண்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் இருந்த காவல்துறையினர் மனு வாங்கும் நேரம் கடந்து விட்டது என பொது மக்களை நிறுத்தினர்.

கலெக்டர் முகாமிற்கு காரில் சென்ற கலெக்டர் ரமண சரஸ்வதி பெண்களைப் பார்த்து தனது வாகனத்தை நிறுத்தினார். பின்னர்‌ பெண்கள் தங்களுக்கு பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் தாமதமாக வர நேரிட்டது எனவும் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ரமண சரஸ்வதி கூறினார்.

மேலும் இதனை தொடர்ந்து நரிக்குறவர் இனத்தினர் அவர்களும் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.மனுக்களை வாங்கி கொண்டு கலெக்டர் ரமண சரஸ்வதி முகாமிற்கு ( வீட்டிற்க்கு) சென்றார்.

நேரம் கடந்து வந்த சூழ்நிலையிலும் பெண்கள் இருப்பதை பார்த்து ஒரு பெண்ணாக இருக்கும் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி காரை நிறுத்தி அவர்களை மதித்து மனு வாங்கியது அனைவரது பாராட்டை பெற்றது.

Updated On: 18 July 2022 3:17 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்