/* */

அரியலூர்: மாவுப்பூச்சி தாக்குதலால் அழிந்த கரும்பு பயிர்களுக்கு நிவாரணம்

மாவுப்பூச்சி தாக்குதல் அழிந்த கரும்பு பயிருக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர்: மாவுப்பூச்சி தாக்குதலால் அழிந்த கரும்பு பயிர்களுக்கு நிவாரணம்
X

திருமானூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

அரியலூர் மாவட்டம் திருமானூரில் நடந்த தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட ஆலோசனைக்கூட்டத்தில் மாவுப்பூச்சி தாக்குதலால் அழிந்து போன கரும்பு பயிர்களுக்கு, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கரும்பாயிரம் தலைமை வகித்தார். செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் சிவகுரு, மாநில குழு உறுப்பினர் மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் வைத்திலிங்கம் வரவேற்றார். சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத்தின் வளர்ச்சி, செயல்பாடுகள் பற்றி பேசப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில், சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையின் கரும்பு விவசாயிகள் சங்கம் மண்டலம் வாரியாக அமைப்பது. புதிய உறுப்பினர்கள் பதிவு செய்வது. கோத்தாரி சர்க்கரை ஆலையில், 2020-21 ஆண்டு பருவத்தில் பதிவு செய்து, விவசாயிகள் பயிரிட்ட கரும்புகளில் மாவுப் பூச்சி தாக்கி கரும்புகள் அழிந்து போனதால், பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஆலைக்கு பதிவு செய்த கரும்புகளை பதிவு அடிப்படையில் வெட்ட வேண்டும் ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 மத்திய அரசு வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On: 28 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது