Begin typing your search above and press return to search.
செட்டிஏரி பூங்காவுக்குள் நுழைய கட்டணம் கிடையாது: குழந்தைகள் ஜாலியாக விளையாடலாம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செட்டி ஏரி பூங்காவிற்கு வருகை தரும் அனைவருக்கும் இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், அரியலூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள செட்டி ஏரி பூங்காவில் சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் சார்பாக குழந்தைகள் விளையாடுவதற்கு பல்வேறு விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செட்டி ஏரி பூங்காவிற்கு வருகைதரும் பொது மக்கள் மற்றும் குழந்தைளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.